

ஒரு
எண்ணம் - இது
புதிய
திருப்பமென்று
இனி
இரட்சிக்கப்படுவோம்
என்ற
எண்ணமாய்
மாலைவரை - மகிழ்ந்திருக்க
காலையில்
கனவெல்லாம்
கவிழ்ந்திருக்கும்
இறந்து போன
இந்தக் கணம்
வரையிலும் கூட
நம்பிக்கையிருக்கிறது
இருந்தும்
நெஞ்சினுள்
நிறம் மாறிப்போன
நியதிகள்
வார்த்தைகள் தொடங்கி
வருடங்கள்
முடிகின்றன..
பட்டதென்னவோ
வேட்டுக்காயங்களும்
வெட்டுக்காயங்களும்
ஆனாலும்
அப்பாவி - நான்
வேறுபாடு - நீங்கி
வாழ்வில்
மாறுபாடு - வர
விழித்தே இருக்கின்றேன்
காண்பது
கனவாகக் கூடாது
என்பதற்காக
வார்த்தைப்
புழுதியில் - வேர்த்துப்
புரையோடிப்போன
நம்பிக்கையை
நம்பலாம் - நாளைவரை
நாளை மறுநாள்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக