
என்னவளே
நினைவுகளை
சுமந்து கொண்டு
நீ வந்திருந்தாயாம்
வந்திருப்பேன்
வாசலில் - சத்தியம்
இடறி விட்டது
நெஞ்சமே
கடைசி முறையாய்
நீ - தந்த
சர்க்கரைப்
பொங்களை விட
உன் வரவு
எனக்கு
இனித்தது
என்ன செய்வது
நாம்
சந்திக்காதிருப்பது
சமூகத்தின்
சம்பிரதாயமல்லவா?
பிரியமே
இறந்தது
காலங்கள்தான்
கனவுகளல்ல
நிசப்தமில்லா
உலகில்
நிதர்சனமான
அன்பு இது
காத்திருப்பதும்
கஷ்டமல்ல
மீறினால்
நாளை
நானும் - நீயும்
சந்திக்கலாம்
உன்
குழந்தைகளுடனும்
நம் - கனவுக்
குழந்தைகளுடனும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக