லேபிள்கள்

சனி, 17 செப்டம்பர், 2011

ஓர் இரவில் .....


மழுங்கியது
கூர் பார்த்து
போடப்பட்டது
உறைக்குள்

மனித நேயம்
கைது செய்யப்பட்டு
தள்ளப்பட்டது
சிறைக்குள்

முழு நிலவு
வளர மறுத்து
ஒளிந்து கொண்டது
பிறைக்குள்

பிரார்த்தனைகள்..
வேண்டுதல்கள்...
ஜெபங்கள்...
எல்லாமே - நாட்சுவர்
அறைக்குள்

வந்த இரவு
வழி தவறி
புகுந்து கொண்டது
கறைக்குள்

இப்போதெல்லாம்
மனித - உயிரிருப்பது
துப்பாக்கி
ரவைக்குள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக