
கால்கள்
சுடுகின்றன
நிற்பதற்கு
நிழல் வேண்டும்
வன்முறை வெயில்
வாட்டிக் கொண்டிருக்கிறது
தேகம் - கறுத்து
சிதைந்து
போனேன் - நான்
நாய்களும்
முகர்ந்து பார்த்து
சீ..
மனித இறைச்சி
நீண்ட குழலில்
வாசம் செய்த
நீசனொன்று - என்
நெஞ்சில்
புகுந்த போது
இறந்து
போனேன் - நான்
வருவேனென்ற
வெண்புறா விருந்தாளி
வரவேயில்லை
இறந்து
போனேன் - நான்
எனக்கு
எம சபையில் - தீர்ப்பு
"மீண்டும்
தமிழனாய் பிற
நரகம்
அனுபவி"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக